பிரிந்து செல்வதும் இயல்பு தான்

பிரிந்து செல்வதும் இயல்பு தான்

       எல்லோரிடமும் நான் கேட்பதும் எதிர்பார்ப்பதும் நேர்மையானதாக இருக்கவே அது  அன்பாகவோ அல்லது என் மீதான வெறுப்பாகவோ இருக்கலாம். ஆனால் நேர்மையாக இருந்து விடுங்கள் அது உங்களை என்னுள் ஆழ புதைத்து செல்லும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை விலகிச் செல்லலாம் நான் அதற்கு ஒருபோதும் எதிராகவும், காரணம் கேட்டும் உங்கள் முன் நிற்க மாட்டேன்.

      வாழ்வில் அன்பு செய்வதும், பழகுவதும் எத்தனை இயல்பான காரியமோ அது போல பிரிந்து செல்லுதலும் இயல்பு தான்.  ஆகவே அதை ஏற்கப் பழகுகிறேன். நீங்கள் விட்டு விலகுவதால் உங்கள் அன்பை ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன், என்னை விட அதிகமாக அன்பு செய்யவும், நேரம் கழிக்கவும் வேறு உறவு கிடைத்து விட்டதை எண்ணி மனமகிழ்ந்து வழியனுப்பி வைக்கிறேன்.

-யாரோ ஒருவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!