வாழ்வில் மாற்றம்!!!

வாழ்வில் மாற்றம்!!!

எழுத்தாளர் – ஜெயந்தி

வாழ்வில் மாற்றத்தை சந்திக்காத மனிதனின் வாழ்வில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கூறுகிறது இந்த கதை.

 

ஓர் அழகான குடும்பத்தில் மாயா என்ற பெண் குழந்தை வளர்ந்து வந்தாள்.அவள் மீது பெற்றோர் மிகுந்த பாசம் வைத்து வளர்த்து வந்தனர்.

மாயா எந்த ஒரு பொருட்கள் மீதும் அதிக பற்று இல்லாமல் இருப்பவள் அதிகமாக பயணம் செய்ய விரும்புவள். தைரியமாக எதையும் துணிந்து செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவள்.

அவள் ஆசைகள் அனைத்தையும் பெற்றோர்கள் எளிதில் நிறைவேற்றுவார்கள். அன்பு,பாசத்திற்கு அவள் கட்டுப்பட்டவள்.அதனால் அவள் வாழ்வில் அனைவரையும் எளிதில் நம்பக்கூடிய பெண்ணாக இருந்தாள்.

எளிதில் அன்பு,அக்கறை காட்டக் கூடிய மாயா அதனை தன் பெற்றோர்,நண்பர்களிடம் இருந்தும் எதிர்பார்த்தாள்.ஆனால்,அவளது எதிர்பார்ப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை.அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அவள் அன்பு காட்டிய யாரும் மாயாவுக்கு உண்மையாக இல்லை.நண்பர்கள் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும் அவளது கனவில் கூட அவளது நண்பர்களே அதிகம் வருவார்கள்.நண்பர்களுடன் இருப்பதையே அதிகம் விரும்புவாள்.

வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு சென்ற போது அவளது தேவை வெறும் அன்பாக இருந்தது.அன்பின் தேடல் அவளுக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தந்தது.அதுவே அவளது பலவீனமாகவும் ஆனது.

திடீரென மாயாவின் தந்தை இறந்து விட்டார்.அவளது வாழ்வில் மிக முக்கியமான ஒருவர்.அவர் அவளை விட்டு சென்றது.மிகுந்த ஏமாற்றத்தையும், வலியையும் கொடுத்தது.மாயாவின் தந்தை இறந்த பிறகு அவளது வாழ்க்கை மிகவும் கவலையாக ஆனது.அதன் பின் அவளது வாழ்க்கை அவளுக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்தது.

அவளின் துயரமான நேரத்தில் அவளது உறவினர்களின் நடவடிக்கைகள் மேலும் அவளை காயப்படுத்தியது.யாரையும் முழுமையாக நம்பக்கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றியது.

அவள் காட்டிய அன்பு விலை மதிக்க முடியாது. அதனை யாரேனும் உதாசீனம் படுத்தும் போது வேதனை அடைந்தாள்.

இது போன்ற நிகழ்வுகள் அவளுக்குள் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தியது.மாயா ஒரு தெளிவு நிலையை  அடைந்தாள்.யாரும் யாருக்காகவும் இருப்பதில்லை.மனிதர்கள் இன்று இருப்பது போல நாளை இருப்பதில்லை.

மாயாவின் அன்பு புரிந்தவர்களுக்கு அவள் ஒரு வரம்.தன் அனுபவ பாடங்களை கொண்டும், மாயாவின் தந்தையின் பிரிவும் அவளுக்கு வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க வைத்தது..

தன் அனுபவ அறிவை வைத்து வாழ தொடங்கினாள். அனுபவம் தரும் அறிவை வேறு எதனைக் கொண்டும் பெற முடியாது.

வாழ்வில் மாறாத ஒன்றே ஒன்று மாற்றம் என்பதை மாயா உணர்ந்தாள்.

                                                                  மாற்றம் ஒன்றே மாறாதது.

எழுத்தாளர் – ஜெயந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!