காதல் தெரியும் முன்

காதல் தெரியும் முன்

      சதீஸ் ஒரு கேன்சர் நோயாளி . அவன் இன்னும் சிறிது காலம் தான் உயிரோடு இருப்பான் என மருத்துவர்கள் அனைவரும் கூறிவிட்டனர். அந்த விஷயம் அவனுக்கும் தெரியும். இருந்தாலும் அது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஏனெனில்,  அவன் ஒரு அழகிய பெண்ணை …..

      ஏனெனில், அவன் ஒரு அழகிய பெண்ணை காதலித்தான். ஆனால் அதை அவளிடம் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதை மட்டும் மகிழ்ச்சியாக கருதினான்.

      அந்த பெண் CD கடையில் வேலை பார்க்கிறாள். இதனால், அவன் அதை சாக்காக கொண்டு தினமும் அந்த கடைக்கு சென்று ஒரு CD வாங்கிவிட்டு அவளிடம் பேசிவிட்டு வருவான்.

      சில நாட்கள் அவனை அந்த கடை பக்கம் காணவில்லை. அவள் அந்த பகுதியில் விசாரித்த போது அவன் இறந்துவிட்டதாக கூறினர்.

      அவள் மனமுடைந்து அவனது வீட்டிற்கு சென்றாள். அவனது அம்மாவிடம் அவனை பற்றி விசாரித்தாள். அவனது அம்மா அவளை சதீஸின் அறைக்கு அழைத்து சென்றாள். அங்கு சென்ற அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  அவன் வாங்கிய அணைத்து CD –களும் வெளியே எடுக்கப் படாமல் இருந்தன. இதை பார்த்து அவள் கதறி கதறி அழுதாள்.

      என்னவென்றால், அவள் அந்த அணைத்து CD கவரிலும் அவனுக்கு காதல் கடிதம் எழுதி அனுப்பி இருந்தாள்.  ஆம் , அவளும் அவனை   காதலித்து இருக்கிறாள். அவனது துரதிர்ஷ்டம் அவனுக்கு இந்த விஷயம் தெரியும் முன் இறந்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!