தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்கையில் சில நிகழ்வுகள்

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்கையில் சில நிகழ்வுகள்

      தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1300 கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்துள்ளார். இது நாள் வரையில் உலகில் வேறு யாராலும் நெருங்க முடியாத எண்ணிகையில் கண்டு பிடித்துள்ளார். இது வரை 1093 கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளார். 

      அவர் கண்டுபிடிப்புக்கு பாராட்டுகளை கூட பெற விரும்ப மாட்டார் ஏனென்று கேட்டால் “நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று கூறுவார். எடிசனின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இனி பார்க்கலாம்.

சிறு வயது:

      அவரது சிறு வயதில் அவரது ஆசிரியர் அவர்க்கு படிப்பு ஏறாது மந்தமாக இருக்கிறார் என்று திட்டி கொண்டே இருந்ததால் அவரது அம்மா அவரை வீட்டிலேயே இருக்குமாறும், அவரே கல்வியை கற்று கொடுத்து கொண்டும் இருந்தார்.

      அவர் பாடங்களோடு சேர்ந்து பைபிள் மற்றும் நல்ல நூல்களை படிக்குமாறு அவரது அப்பா கூறினார். மேலும் அவர் படித்து முடிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10 சென்ட் அளித்து உற்சாக படுத்தினர்.தாமஸ் தனது 10 வயிதிலேயே பெரிய பெரிய அறிவியலாளர்களின் புத்தகங்களை படித்து முடித்தார். இவருக்கு சார் வயதில் இருந்தே எதை பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்விகளை கேடு கொண்டே இருப்பர். ஒரு முறை வீட்டில் கோழி அடை காத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தாணும் முட்டை மேல் அமர்ந்தால் குஞ்சு பிறக்குமா? என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் அதனை செய்தும் பார்த்தார். இதிலிருந்து அவர் எதின் மேல் சந்தேகமும் ஆர்வமும் வந்தாலும் அவர் செய்து பார்த்து விடுவர். கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.

முதல் கண்டுபிடிப்பு:

      எடிசன் இரவு நேரங்களில் ரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிங்கை குடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனை ஏன் தானியக்கி மயமாக கூடாது என்று யோசித்து அதை செயல் படுத்தி காட்டினர்.

மின் விளக்கு கண்டுபிடிப்பு:

      உலகம் முழுவதும்   தீயின் மூலம் இருளை போக்கி கொண்டு இருந்தனர்.இவர் அதை மின்சாரத்தின் மூலம் போக்கலாம் என்று யோசித்தார். இதை உலகத்தில் உள்ள அணைத்து விஞ்ஞானிகளும் முடியாது என்று கூறினார்கள். அனால் எடிசன் முடியாது என்ற சொல்லை தனது அதிகாரத்தில் இருந்தே நீக்கி வைத்திருந்தார். இது அவருக்கு பெரும் சவாலாகவே இருந்தது. மின் சக்தியை தாங்ககூடிய கனிமங்களை தேடினர். இவர் 1500 சோதனைகள் செய்து பார்த்தார்.

      அதன் மூலம் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 3000 கோட்பாடுகளை வகுத்தார். இதில் ஆச்சர்யம் என்றால் அதில் ஒரு கோட்பாட்டு தான் மின் விளக்கு எரிய கூடிய கோட்பாடு. விடாமுயற்சியுடன் உழைத்து மின் வவிளக்கை எரிய வைத்தார். இதன் மூலம் உலக விஞ்ஞானிகளின் கூற்றை பொய்யாக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!