ஏன் இத்தனை காதல்?

ஏன் இத்தனை காதல்?

எழுத்தாளர் – யாரோ ஒருவன்

உனை  பார்த்தபின்  உனை கடந்து  

செல்வதென்பது  அத்தனை சாதாரண காரியமல்ல 

என் கண்ணம்மா…………

உன் கூரிய விழிகள் 

என் நெஞ்சை கிழித்து 

 அதனுள் உனை வைத்து தைத்து விடுகிறது…………..

ஒவ்வொரு முறையும்  நீ  என்முன் எதிர்படும் போதெல்லாம் 

உந்தன் பார்வையாள்  கொலையுண்டு கிடக்கிறேனடி நான்…………

நீ  எங்கிருந்தாலும்  

உந்தன்  குரல்  வந்து  எந்தன்  நரம்பில்  தேனேற்றி 

 உந்தன் முன்  வந்து  நிற்க  ஆணையிடுகிறது……...

நானும்  அவ்வாறே  பணிகிறேன்  உன்  குரலுக்கு………..

எனை  பணியவைக்க  உனை  தவிர  

வேறு  யாராலும்  முடியாது  கண்ணம்மா……..

நான்  என்  நிலையை  மாற்றிக் கொண்டதாக  நீ  எண்ணாதே !!!

 ஏனெனில், ஒரு முறை மாற்றினால்  அது  மாறிக் கொண்டே இருக்கும் …….

நான்  இப்படி  தான்……….. 

பிடித்த  இலயத்திற்காக  எதையும்  செய்யும்  பைத்தியக்காரன்,

 ஒன்று  மட்டும்  அறிந்து  கொள்  

இதுவரை  என்னுள்  நிகழ்ந்த  பெரிய  மாற்றம்  ஒன்றே  ஒன்று 

அது நீ மட்டும் தான்!!!!!

 

உன்னையும்  நான்  நன்றாக  அறிவேன் கண்ணம்மா

நீ ஒருபோதும் உனை  எதற்காகவும்  மாற்றிக் கொள்ள மாட்டாய்….

எனை  மாற்றச்  சொல்ல மாட்டாயடி….,

 பின் ஏன் இத்தனை காதல் என்றால்

 நீ  நீயாக இருப்பதால் 

நான் எனை  நானாகவே  இருக்க  விடுவதால் 

வரும்  காலங்களில்

 நாமாக இருப்போம்………..

எழுத்தாளர் – யாரோ ஒருவன்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!