சுய மனஆறுதல்

சுய மனஆறுதல்

      எல்லாருக்கும் ஒரு ஆறுதல் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனம் விட்டு அழுது நம் வாழ்வின் சோகங்களை எடுத்து கூறி அதற்கான தீர்க்கமான முடிவை பெற வேண்டியுள்ளது. ஆனால் அந்த ஆறுதலானது வேறு ஒருவரிடம் இருந்து தான் பெறப்பட வேண்டுமென்பது தான் இங்கு வாழ்வின் சாபம். ஏனெனில் ….

      அந்த ஆறுதலை தரும் ஒருவர் நம்மை மீண்டும் அதே மாதிரியான ஆறுதலை தேட வைத்துவிட்டால் அதுவே பெரிய வலியின் தொடக்கமாக இருக்கும். உங்களுக்கான துணை வேண்டும் பொழுது உங்களையே துணையாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நினைவுகளை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள்,  உங்கள் துக்கங்களை உங்களுடனேயே பரிமாறி அதற்கான வலியை தீர்த்துக் கொள்ளுங்கள். தனியே இருந்து சோகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஆறுதலையும், சந்தோசங்களையும் உங்களை தவிர வேறு எவராலும் தர இயலாது.

 -யாரோ ஒருவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!